ஷேவாக்கும் டோண்டுவும் நானும் ஒன்றா???

மார்ச் 18, 2007

ரொட்டிக்கடையிலே குஞ்சேட்டன் ரொட்டி சுத்திக்குடுத்த மலையாளப்பத்திரிக்கையாகட்டும்,(அப்பெல்லாம் அதுல ஷகிலா படம் வராது)அதுக்கும் முன்னாடி பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துலே
அண்ணாச்சி கடையில் பட்டாணி கட்டுன பழைய ராணி,கல்கண்டு பத்திரிகைகளாகட்டும்,புகைவண்டியிலே இடம் புடிக்கறதுக்கு யாரோ போட்டுட்டு போன தெலுங்கோ, கன்னடமோ, ஒரியா பத்திரிக்கையாகட்டும்(அதப்பாத்தாலே ஜிலேபி, ஜிலேபியாத்தான் நமக்கு தெரியும்கறது வேற விஷயம்) படிக்கறதுங்கறது ஒரு சுவாரசியமான சமாச்சாரம்தானுங்களே.

படிப்பு சம்பந்தமான புத்தகங்களை தவிர மத்த எதையும் படிக்கறதுங்கறது ஒரு சமயத்துலே ஒரு வெறியாவே மாறிப்போனது.(“நல்லாப்படி சாமி”ன்னு பாட்டி சொன்னத
நான் தப்பா புரிஞ்சு வெச்சுருந்தேன்).

சரி பெருசு, மேட்டருக்கு வா, அப்படிங்கறீங்க.இன்னிக்கு மேட்டர் எதுவும் சிக்கலீங்க.அதான் மேட்டர். (“ஒரு வாரம் எப்படி ஓட்டப்போறே”) கெக்கெக்கேன்னு நீங்க சிரிக்கரது கேக்குது.

நேத்து வரைக்கும் மொக்கை போட்ட ஷேவாக் இன்னிக்கு பட்டைய கிளப்பிட்டாரு. இதுல ஆறி அவலாகி நொந்து நூடில்ஸான மேட்டருங்கள எழுதுன யாருங்க படிப்பா.
சரி எதுனாச்சும் குட்டைய குழப்பலாமான்னு பாத்தா இன்னிக்கு அண்ணன் டோண்டு இப்படி ஒரு பதிவு போட்டிருந்தார்.

நான் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். எந்த நாட்டுக்காரரும் வெளிநாட்டில் இருக்கும்போதோ அல்லது தாய்நாடு திரும்பியபோதோ தமது மொழியை மறந்ததில்லை. ஆனா நம்ம நாட்டுலே பாருங்க, வெளிநாட்லியோ, இல்ல உள்நாட்லியோ ரெண்டு ஹிந்தி பேசுபவர்கள் சந்தித்தால் 99% ஹிந்தியில்தான் பேசிக்கொ(ல்)ள்கிறார்கள். இரண்டு மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில்தான் சம்சாரித்து கொள்கிறார்கள். தெலுகு பேசுபவர்களும் அஃதே.(ஹையா,ஆயுதஎழுத்தை உபயோகிச்சாச்சு).

ரொம்ப நாள் கழிச்சு இந்தியாவுக்கு போனா, சந்திச்சவுங்க எல்லாம் ரொம்ப ரொம்ப சிரமப்பட்டு ஆங்கிலத்திலேயே உரையாடல் நடத்த முயற்சித்தாங்க.அதுக்காக படிக்கறது புடிக்கறது எல்லாம் தமிழ்லியே இருக்கணுமுன்னு நான் சொல்ல வர்லீங்க. நம்மளோட ஆதங்கம் எல்லாம் முடிந்தவரை தமிழில் அளவளாவ வேண்டுமென்பதே. விடுமுறையில் சென்னையில் சென்ற பல இடங்களிலும் எங்களை பலரும் கேட்டுக்கொண்டது “சாதாரணமா பேசுங்களேன்,(அதாவது தமிங்லீசு) ஏன் இப்படி சிலோன்காரன் மாதிரி தமிழ்லியே பேசுறீங்க?”.

இங்கு பெரு நாட்டில் நாங்கள் வசிக்கும் ஊரில் நாங்கள் மட்டுமே தமிழ் பேசுபவர்கள்.தமிழ் பேசுபவர்களை சந்திக்க வேண்டுமென்றால் ஆயிரத்து முன்னூறு கல் தொலைவில் தலைநகரத்தில் உள்ள மூன்றே மூன்று குடும்பங்கள் மட்டுமே.

யாருடைய தாய்மொழியை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர்களை, தூங்கும்போது திடீரென்று தூக்கத்தை கலைத்தால் முதலில் அவர்கள் பேசும் மொழியே தாய் மொழின்னு சொல்லுவாங்க.

என் செய்வது,தலைஎழுத்து. எங்க வீட்டில் ‘ஸ்பானிசு’ இல்ல பேசராங்க.

டிஸ்கி: ஷேவாக்கு,டோண்டு இதெல்லாம் சும்மா கவர்ச்சிக்கு.
ராயல்டி ஏதாச்சும் வேணும்ன்னா ஐ யாம் தி எஸ்கேப்பு.


வந்தனம், வந்தனம்!வந்த சனமெல்லாம் குந்தணும்

மார்ச் 18, 2007

உங்கோ எல்லோர்க்கும் வண்க்ம்

டமில்மண்த்திலே இர்ந்து இப்டி ஒர்ரு மயில் வந்திச்சு.

அன்புள்ள பதிவர் பெருசு அவர்களுக்கு,
தாங்கள் வரும் மார்ச் மாதம் 19 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 25 ஆம் தேதிவரை தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்க அன்புடன் அழைக்கிறோம். ந‌ட்ச‌த்திர‌ வார‌ம் ப‌ற்றிய‌ மேல‌திக‌ த‌க‌வல்க‌ளுக்கு த‌மிழ்ம‌ண‌த்தின் இந்த‌ ப‌க்க‌த்தை பார்க்க‌வும்
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=star_of_the_week
புரிந்துணர்வுடனான தொட‌ர்ந்த‌ உங்க‌ள் ஒத்துழைப்புக்கு ந‌ன்றி

அப்டியே தல காலு புர்யாமே நம்மோ துர்வா நட்சத்திர்மே பாத்திருக்கோம். டமில்மண்த்திலே ஸ்டார் ஆகுரதுக்கு இன்னா செயினும்,அப்டின்னு தெர்யாம தலைய ஆட்டி வெச்சிட்டு, அப்டியே டமில்மண்த்துக்குல்ல போயிப்பாத்தேன். பெர்ய பெர்ய ஸ்டாருங்கோ இல்லாம் வந்துட்டு போராங்கொ. போயிருக்காங்கோ,ஹி ஹி போவாங்கோ!!!

பர்வாயில்லே,நம்ம டமிலுக்கு சேவா புர்ய எலுதியேஆகனும். நானு கான்வெண்ட் மேலே படிக்கும்போதே விர்மாமுனிவர் எல்லாம் படிச்சிருக்குது.

இப்போ டமில் மேலே எலுதுசொல்லிச்சு,கத எலுதுது,கட்டுர எலுதுது.எனுக்கு கொத்தனார் , பொன்சு பாட்டு எலுதுன்னு சொல்லிகுட்துச்சு.அதுக்கு இப்போ நேரம் வந்துச்சு.

நீங்கோ இப்ப எனிய திட்ட ஆரம்பிக்குது, அதுக்கு முன்னாடி ஒர்ரு விலக்கம் குடுக்குது.

தமில்நாட்லேதான் நான் பொரந்துச்சு. நல்லா டமில் பேஸ்வேன். ஆனா இந்தியாவுக்கு வெலியே போன உடனே டமில் மரந்து போச்சு.

போன வர்சம் இந்தியா போனா,அங்கே கூட எல்லாரும் என்னை மாதிரியே பேஸ்ராங்கோ. டிவிலே பாத்தேன். fm ரேடியோ எல்லாம் கூட நம்மல மாதிரியே பேசினாங்கோ.
……………………………………………..

“எவ்வளவு நேரந்தான் அந்த லேப்டாப் முன்னாடி இப்படி வெறிச்சு பாத்துகிட்டுட்டே
உஙகாந்துகிட்டு இருப்பீங்க.கண்ணு என்னத்துக்கு ஆகும்”, வழக்கம்போல தங்கமணியின்
தாலாட்டு.

நீங்களே சொல்லுங்க,எப்படிங்க வித்தியாசமா ஒரு பதிவ ஆரம்பிக்கறது. இதுவரைக்கும் வந்து போன நட்சத்திர பதிவர்களெல்லாம் பழம் தின்னு கொட்டை போட்ட ஆசாமிகள்.(உண்மையிலேயே இதுக்கு அர்த்தம் என்னங்க,யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்க).

நம்மெல்லாம் சும்மா ஜுஜூபி.
தயவு செஞ்சு எல்லாரும் கொஞ்சம் பொறுத்துக்கங்க.

வாரக்கடைசிலே சேத்து வச்சு ஒண்ணா குமுறிக்கோங்க.
தல கைப்புள்ளய கூட்டிட்டு வர்ரேன்.