இப்பவே தண்ணி தவிக்குது

மார்ச் 22, 2007

இந்த ஐக்கிய நாடுகள் சபை அப்படின்னு ஒண்ணு இருக்காமே. அங்கே ஆணி புடுங்கறவுங்க யாராவது இருக்கீங்களா தம்புகளா. என்னோட பொறந்த தேதிய சொல்றேன்.ஏதாவது செய்ய முடிமான்னு பாருங்க.

ஏன்னா சும்மா வெட்டியா ஏதாவது ஒரு தேதிய எடுத்துக்க வேண்டியது. இன்னிக்கு அந்த நாளு , நாளைக்கு அந்த நாளு அப்படின்னு தேதி குறிச்சு
கொண்டாடச் சொல்ல வேண்டியது.இதுதான் அவனுங்க வேலைன்னு சொலறாங்க.

இப்படித்தாங்க கொஞ்ச வருஷத்துக்கு முந்தி மார்ச் 22ம் தேதிய “உலக நீர் நாள்” அப்படின்னு குறிச்சு விட்டாங்க.

உலகத்துல நிறைய தண்ணி இருந்தாலும்,(நல்ல குடிநீர்)
எல்லாருக்கும் கிடைக்குறது குதிரைக்கொம்பா போச்சு.

உலகம் சூடாயிட்டு வருதுன்னு எல்லாரும் பேசிக்கறாங்க.அது நம்ம தாய்க்குலங்க
எருவாமுட்டி வெச்சி தண்ணி காச்சறதாலியோ, வெறகு வெட்டி அடுப்பு எரிக்கறதுனாலியோ
போகிக்கு பழச எரிக்கறதாலே இல்லியாங்க.

மக்கள் தொகை அதிகமாக அதிகமாக எல்லாத் தேவைகளும் அதகமாகுது இல்லியா,
இப்போ பெட்ரோலுக்காக எப்படி சண்டை போடறாங்களோ அதே மாதிரி நல்ல குடிதண்ணிக்கும் சண்டை போடற காலம் ரொம்ப தூரத்திலே இல்லீங்கோ.

இப்பவே போடுலியான்னு கேக்காதீங்க.
இப்ப போடுற சண்டைய நம்ம ஆளுங்க நெனச்சா ஒரே நாள்லே தீத்துக்க முடியும். அவங்க அவங்க அரசியல் லாப நஷடம் பாக்காம, உக்காந்து பேசுனா, இந்தப்பிரச்சினைய மக்கள் பிரச்சினையா நெனச்சா தீர்க்க முடியாதா என்ன.

நம்ம குழந்த குட்டிகளுக்கு சொத்து,நகை நட்டு சேத்து பிரியோசனம் இல்லீங்க. குடிக்க ஒரு வாய் தண்ணி இல்லேனா எவ்ளோ சொத்து இருந்தாலும் ஒரு மண்ணாங்கட்டியும் பிரியோசனம் கிடயாதுங்க.

2030ம் வருஷத்துலே மொத்த சனத்துலே முக்கால்வாசி பேருக்கு குடிக்க, கழுவ தண்ணி இருக்காதுன்னு இதே ஐக்கிய சபையிலிர்ந்து சொல்றாங்கோ.

உலக உருண்டையிலே இருக்குற நதிகள்ளெ கிட்டத்தட்ட எல்லா நதிகளுமே வறண்டு போக வாய்ப்பு இருக்குன்னு வேறே சொல்றாங்க.

அதுலே முக்கியமா பத்து நதிகள சொல்றாங்க.

1. பெரியாறு (முல்லைப்பெரியாறு இல்லீங்க, இது புதரகத்திலே இருக்கிற பிராவோ நதி.).

2. டான்யூப் ஐரோப்பா கண்டத்துலே இருக்குரது,

3.வெள்ளியாறு (இது தென் அமேரிக்காவுலே இருக்குதுங்க.)

4. கங்கையாறு (சொல்லவே வேண்டியதிலே, இனி மோட்சத்தை தேடி காசிக்கு போக
வேண்டியது இல்ல, அதுவா நம்ம தேடி வரும்.).

5. யாங்சே (இது சப்பை மூக்கு சைனாக்காரனுது).

6. மேகாங் (இதுவும் இன்னோரு சப்பை மூக்கன், வியட்நாம்காரனது)

7.சல்வீன் ( சைனாவுலே பொறந்து பர்மா வழியா தாய்லாந்துக்கு ஓடறது

8. இண்டஸ் (போச்சு, போச்சு, சர்தாருங்க எல்லாம் அமெரிக்காவுக்கு டேக்ஸி ஓட்டப்போக வேண்டியதுதான்.
அது மட்டுமில்லாம திபெத்லே பொறந்து காஷ்மீர் வழியா கராச்சிக்கு ஓடறதாலே பாக்கிஸ்தானுக்கு ரொம்ப முக்கியம் இந்த நதி.இதுகு இன்னோரு சண்டை கூட வரலாம்)

9. நைல் (நதியா நதியா நைல் நதியான்னு இனி பாட முடியாதுங்க, அடப்பாவிங்களா, எத்தனை நாடுகள் இந்த
தண்ணிய பங்கு போட்டுக்கறாங்க. ரெண்டு ஸ்டேட்டுக்குள்ளே முடியிலியே மக்கா.)

10. முர்ரெ டார்லிங் (யாரையோ கூப்புடற மாதிரி இருக்குங்களா, ஆஸ்திரேலியாவும் அவுட்).

இதுக்கப்புறமும் தயவு செஞ்சு யாரும் தண்ணிய தண்ணியா செலவு செய்யாதீங்க.அப்புறம் வெட்டியா அடிச்சுக்க வேண்டியிருக்கும். அப்புறம் ஒழுகுற ரத்தத்துக்கு கூட கழுவ தண்ணி இருக்காது.( என்ன, காபித்தூளும் மஞ்சத்தூளும் வெச்சுக்கலாங்கறீங்களா, போய்யா மொக்க, குடிக்கவே தண்ணி இல்லே, இதுல எங்கய்யா இதெல்லாம் விளையும்.)

என்னவோ சாமி, மனசுலே பட்டத சொல்லிட்டேன்.
இந்தப்பிரச்சினைக்கு முன்னாடி சொத்து, சாதி, மதம் இதெல்லாம் தூசி.

தயவு செஞ்சா மக்கா, எல்லாரும் யோசிங்க, படுத்துட்டு உக்காந்துட்டு, சாப்புடும்போது , நிக்கும்போது, கார்ல பஸ்ல ட்ரெய்ன்ல விமானத்துல, முக்கியமா ஒவ்வோரு வாய் தண்ணி குடிக்கும்போதும் யோசிப்பீங்களா.
(எங்கியாவது ரெண்டு மூணு கெணறு வாங்கி போடலாம்ன்னு யோசிக்காதீங்க,வெறும் காத்துதான் வரும் பாம்பும் தவளையும்தான் அங்கெ வீடு கட்டும்)

இந்த எதிர்காலப் பிரச்சினையில நம்ம பங்கு என்ன,
என்ன செஞ்சு எதிர்காலத்தை காப்பாத்த முடியும், ஒரெ டம்ளர் தண்ணிய நாலு பேர் ஸ்பூன்லே குடிக்க முடியுமா.

யோசிங்க,தயவு செஞ்சு யோசிங்க.


நான் ஒரு பொறுக்கி

மார்ச் 22, 2007

வண்டிச்சக்கரம். இந்தப்பேர்ல ஒரு தமிழ்ப்படம் வந்துச்சுன்னு நினைக்கிறேன். சிவக்குமார் கதாநாயகனாக நடித்தது.சில்க் கூட இதில்தான் அறிமுகம்ன்னு ஒரு ஞாபகம்.

வண்டிச்சக்கரம்ன்னு படம் எடுத்தாங்க, ஆனா கொசுவத்திச்சுருள் அப்படின்னு யாராவது படம் எடுத்தாங்களா.ஏன்னா flash back போகணுன்னா பொதுவா தமிழ்பட்ங்களின் நியதி அதுதானே.

flashback அப்படின்னா ஒண்ணு கொசுவத்தி சுருள் சுத்தும் இல்லாட்டி வண்டிச்சக்கரம் சுத்தும்.அதேதாங்க நானும் ஒன்னு சுத்தப்போறேன்.

தலைப்ப இன்னோரு தடவை படிச்சுக்கங்க.அதாவது நான் ஆறாங்கிளாஸ் படிக்கும்போது பொறுக்க ஆரம்பிச்சேங்க.நீங்க நெனக்கிற மாதிரியெல்லாம் இல்லீங்க.

நான் பொறுக்க ஆரம்பிச்சது தீப்பெட்டி.அதேதாங்க.தீப்பெட்டின்னா ஞாபகம் சீட்டாபைட்.256 அனற்புள்ளிகள்.

தபால்தலை சேகரிப்பு மாதிரி இதுவும் ஒரு விருப்ப விளையாட்டுதாங்க.ஆனா செலவு எதுவும் இல்லாத விளையாட்டு.பள்ளிக்கூடத்துக்கு போகும்போதும் வரும்போதும்
வழியிலே கிடைக்கிற ஒவ்வொரு தீப்பெட்டியையும் பாத்து பொறுக்கி எடுத்துக்குவோம்.

எங்க தெருவுலே தம் அடிக்கற அண்ணனுங்ககிட்ட போயி “அண்ணா, தீப்பெட்டி இருக்குங்களா”ன்னு கேட்டா, “இர்ரா,உங்க வீட்ல சொல்றோம்பானுங்க”.

“அண்ணா, இல்லீங்ண்ணா, தீந்து போன தீப்டி இருந்தா குடுங்ணா என்போம்.”எதுக்குறா” என்பார்கள்.

“கலெக்ஷனுங்ணா” என்போம். “போடா!, படிக்குற பசங்களுக்கு வேற வேலை இல்லியா” என்பார்கள்.(அதே அண்ணனுகளுக்கு முன்பாக பெட்டிக்கடையில் தங்கத்துகள் அரசர்
ஊதுனது வேறு கதை).

இப்படியாக ஆண்டுவருட இறுதித்தேர்வு முடிந்து ஒவ்வொருவரும் வேறு வேறு ஊர்களுக்கு சென்று பொறுக்கி வருவோம்.ஜூன் மாதம் பள்ளி தொடங்கும் முன்,
விளையாட்டுத்திடலில் கண்காட்சி நடக்கும்.தீப்பெட்டி கண்காட்சிதான்.

இதிலே ரொம்ப “ACE” வேல்யூ கொண்டது ஜோக்கர் பிராண்ட். ஜோக்கருக்கு அடுத்தது பபூன். ஜோக்கர் வைத்திருப்பவன் ஹீரோதான். ஜோக்கர் அதிகமாக விற்பனையானது
சென்னையில்தான் என்று நினைக்கிறேன்.

அதனால் சென்னையில் இருந்து வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் வந்தவுடன் அங்கு பொறுக்கச்செல்வோம். (ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தான் இதற்கு)-
முதல் கம்பார்ட்மெண்டில் ஏறி கடைசி கம்பார்ட்மெண்டில் இறங்குவோம். இதில் ஏழாப்பு படிக்கும்போது ரஜினியை நேருக்கு நேர் வேறு சந்தித்தோம். அது வேறு கதை.

பெட்டி பெட்டியார் ஏறி இறங்கும்போது தெரிந்தவர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது,பார்த்தாலும் ஐஸ் வெக்கத்தெரிந்திருக்க வேண்டும்.இல்லாட்டி வீட்டில் சொல்லி விட்டால் உங்க வூட்டு அடியா எங்க வூட்டு அடியா, அதெல்லாம் ஒரு காலமய்யா. அதப்பத்தி சொன்னா ஒரு பத்து காலம் எழுதலாம்.

இப்படியாக சேர்த்த கலைப்பொருட்களை வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வேறு வைக்க வேண்டும். கடைசியாம் மாட்டுனேன் பாருங்க ஒரு நாள்.

எங்கப்பா ஒரு நாள் திருப்பத்தூர் கல்யாணத்துக்கு போகணும்ன்னு சொல்லிட்டிருந்தாரா, அதைய கேட்டு, அம்மாவிடம் போய், “அம்மா, அப்பாவ திருப்பத்தூர்ல இருந்த் தீப்பெட்டி வாங்கிட்டு வரச்சொல்லும்மா”.

“ஏண்டா,ராஜா.”

“அங்கதாம்மா ஜோக்கர் மேட்ச் பேக்டரி இருக்குது.ஒரு பத்து தீப்பெட்டி வாங்கிட்டு வரச்சொல்லும்மா”.

“எதுக்குடா பத்து”.

“ஒன்னொன்னும் நூறு ஒட்டகத்துக்கு சமம்மா!”

“போடா ,எனக்கு ஒண்ணும் புரியலை”.

உதவிக்கு வந்த அப்பா விளக்கமாய் கேட்க, ஆர்வக்கோளாரில் என்னுடைய கலெக்ஷ்னைக் காட்ட , பிஞ்சு போனது விளக்குமாறு மட்டுமல்ல.

என்னுடைய கலையார்வமும்தான்.


தமிழர்கள் சாதிப்பிரியர்களா??

மார்ச் 22, 2007

நம்ம கோயமுத்தூர் வாத்தியாரு நேத்து ஒரு பதிவு போட்டிருந்தாங்க, ஜாதிகள் இருக்குதடி பாப்பா ன்னு ஒரு பதிவு போட்டிருந்தார்,,

அத பாத்தவுடனே ஒரு மொக்கையா ஒரு யோசனை வந்துச்சு.
முதல்லியே மூணும் மொக்கை, இது அதுக்கடுத்த உப்புமா.

(ம்ம்,செமயா மாட்டிகிட்டியா பெருசு!வேண்டாமுன்னு சொன்னா கேக்கவா போறே!பங்களாதேசதுக்கிட்ட மாட்ன இந்தியா டீமு மாதிரி உன்னை பிரிச்சு மேயப்பொறாங்க.இல்லையில்ல, இலங்கைகிட்ட மாட்ன பங்களாதேஷ் மாதிரியோ,எப்படியோ உனக்கு டின் கட்டப்ப்போறாங்க.சாக்கிரதயப்பூ.)
இப்பவே ஒருத்தனும் கண்டுக்கறதில்ல, இனி எப்படியோ.

சேச்சே,நம்மதான் தல கைப்புள்ள(எங்கிட்டுயா போனாரு,ஆளையே காணோம், யாராச்சும் துபாய்க்கு டிக்கிட் வாங்கி குடுத்துட்டாங்களா).
தொண்டர்கள் ஆச்சே, எவ்வளவு அடிச்சாலும் தாங்கிட்டு நல்லவங்களாத்தானே இருப்போம்.

இல்ல,நான் என்ன சொல்ல வர்ரேன்னா,இந்தியாவுலே இருக்கும்போதுதான் சாதி சங்கமுன்னு ஒரெபிலிமு காட்டுறத பாக்குறோம்.

அடேங்கப்பா, கவுண்டர், செட்டியார்,ஐயர்லே ஆரம்பிச்சு அரிசனங்களில் பல பிரிவுகள் அப்படின்னு தமிழ்நாட்டு கெசட்டுலே பாத்தீங்கன்னா, தலையிலே இருக்குற முடியை விட அதிக எண்ணிக்கையில பிரிவுகள், உட்பிரிவுகள்.

மக்கா,இதுலே எத்தன பேரு கடவுச்சீட்டு (அதாங்க பாஸ்போர்ட்)வாங்கும்போது அதுலே சாதிப்பிரிவையோ, அதுலே வர்ற உட்பிரிவையோ போட்டிருப்பீங்க.0.01% பேரு கூட இருக்கமாட்டிங்க.

ஏன்னா, இந்த சாதி சமாச்சாரம் எல்லாம் கடலைத்தாண்டுனா,என்னவாகுமுன்னு நம்ம ஐய்யாமாருங்களைத்தான்(ஐயமாருங்க இல்லீங்கோவ்)கேக்கணும்..அவங்கதானே அப்பப்ப குடும்பத்தோட வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போறவங்க.

ஆனா இதுல பாருங்க,வடநாட்டுலே இருக்கறவுங்க எங்க போனாலும் கூடவே கொண்டு போறாங்களே, அது ஏங்க???.
“யாதவ்” லே ஆரம்பிச்சு “அத்வானி,அம்பானி,கேல்வானி,கேஷ்வானி” (தேவ்யானி இவுங்கள்ள சேரமாட்டாங்க) வரைக்கும்,ஜாதியையும் உட்பிரிவையும் கூடவேதான் வெச்சிருக்காங்க.

நல்ல வேலை மக்கா, நம்மளுக்கு இங்குலீசுகாரன் வேற மாதிரி சொல்லிக்குடுத்துட்டு போயிட்டான். இனிசியல் இல்லாட்டி சர்நேம் வச்சுக்குங்க,அதாகப்பட்டது அப்பா பேர்ல முத எழுத்த போட்டுக்க, அப்பதான் எல்லாம் செல்லுபடி ஆகும்ன்னு சொல்லிக்குடுத்துட்டான்.இப்பத்தானே போன ஆட்சியிலே அம்மா பேரையும் இனிசியலா போட்டுகிட்டாலாம்,கூடவே வேணுமுன்னா ஊர் பேரயும் வெச்சுக்கங்க,அப்படின்னாங்க.

நம்ம பக்கத்து நாட்லெ, அதாங்க கேரளாவுலே எப்பவுமே குடும்பத்து பேரை அடைமொழியா சேத்துக்குவாங்க. ஆனா அத வெச்சி சாதியெல்லாம் கண்டு புடிக்க முடியாதுங்க.

இதுல மட்டும் பாருங்க, ஸ்பெயிகாரன் நம்ம ஊருக்கு வர்லயப்பூ. வந்திருந்தா நம்மபாடு டரியல்தான். ஒரே ஒரு உதாரணம் சொல்றேன், கேட்டுக்கங்க.

அவிங்க எல்லாம் அப்பா குடும்பத்தோட பேரு, இல்லாட்டி அவுங்க கூட்டத்தோட பேரொட, அம்மா குடும்பத்து பேரு இல்லாட்டி அவுங்க கூட்டத்தோட பேரு, ரெண்டையும் குழந்தையோட பேருக்கு அப்புறம் போட்டுக்குவாங்க. அதாவது சொந்தப்பேருக்கு அப்புறம் ரெண்டு சர்நேம் வெச்சுக்குவாங்க.

நெனச்சு பாருங்க இந்த முறையில ஒரே சாதியிலே கல்யாணம் செஞ்சுட்டா, பொறக்கற கொழந்தைக்கு என்ன பேரு வெப்பாங்க.

(உதாரணத்துக்கு எல்லாரும் மன்னிச்சுக்குங்க.)

நடிகர் சிவக்குமார்,மகன் சூர்யாவுக்கு,, சூர்யா கவுண்டர் கவுண்டர் அப்படின்னுதானே வெப்பார்.

இப்போ கலப்பு திருமணம் செஞ்ச சூர்யா, அவரோட குழந்தைக்கு எப்படி பேருவெப்பார்.
பொறக்குற ஆம்பிள குழந்தைக்கு அப்பா பேர வெச்சாருன்னா,

பழனிச்சாமி கவுண்டர் xxxxx. (ஜோ என்ன கூட்டம்ன்னு தெரியலீங்க)
அப்படின்னுதானே வெக்க முடியும்ம்.

ஆக வயசான காலத்துல கல்யாணப்பத்திரிக்கையிலே போடறத தவிர நம்ம குடிமக்கள், வேற இடத்துலே அதிகமா சாதிப்பேர உபயோகம் செய்யாத காரணத்தாலே,,
நம்ம தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் சாதிப்பிரியர்கள் இல்லை சொல்லிட்டு

ஐயாம் தி எஸ்கேப்பு.