கான்ஸ்டான்டிநோபிளாம்

இதோ அதோன்னு ஒரு வாரம் ஆகிப்போச்சுது
நிசமாவே நம்ம தமிழ்மணம் வாசகர்கள் அஹிம்சாவாதிகள்தான்.

ஏதொ ஒன்று எழுத ஆரம்பித்து ஏதோவென்றில் முடிந்தது.
இன்று காலையில் பார்த்தால் அபிஅப்பா வேறு கொசுவத்தி சுத்தி இருந்தார்.

சரி நம்மளும் மூக்கை தீட்டிட்டு மூக்கை நீட்டிறலாமுன்னு பாத்து, இதோ.

L.K.G / U.K.G- டென்னிசன் பிரைமரி ஸ்கூல்
வாத்தியாரு பேரு அதேதான், எனக்கு ரெண்டு வயசுலிருந்து நாலு வயசு வரைக்கும் இவர்கிட்டதான்.வீட்டுக்கு பக்கத்துலே இருந்ததால்
ரொம்ப வசதியா இருந்ததாம்.

ஒன்றாம் வகுப்பு : மேரி டீச்சர் , உயரமா அழகா இருப்பாங்க.

ரெண்டாம் வகுப்பு : ரோஸி டீச்சர், கிரிஸ்டினான்னு இவுங்க அக்கா பொண்ணும் எங்கூட படிச்சதுலெ நல்ல ஞாபகம் இருக்குது.

மூணாம் வகுப்பு: இராணி டீச்சர் : குட்டையா இருப்பாங்க. சாந்தின்னு அவுங்க பொண்ணு எஙகூட படித்தது. தனியா பாத்து மருமகனேன்னு கூப்புடுவாங்க.அப்பெல்லாம் அதுக்கு அர்த்தம் தெரியாது. கல்லூரி செல்லும்போது அவர்களையும் அவர் மகளையும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்த பொழுது “மருமகனை” ஞாகபப்படுத்திய பொழுது
அதிகம் வெட்கப்பட்டட்து அவருடைய மகளை விட அவர்தான்.

நாலாம் வகுப்பு : ஜோஸ்பின் டீச்சர் , அவருடைய மகள் அனிட்டா , என்னை விட ஒரு வயது இளையவர்.

ஐந்தாம் வகுப்பு : ஆகத்தா டீச்சர், என்னுடைய விருப்பத்தோழி,லில்லியின் தாயார்.(நான் பத்தாவது படிக்கும்போது கேன்சர் வந்து இறந்தார்).

ஆக மொத்தம் எல்லா டீச்சருக்கும் மகள்கள்தான் இருந்தாங்க.பெருசு இதெல்லாம் ஓவரு.அடங்குன்றீங்க. சரி சரி.

ஆறாம் வகுப்பு :பள்ளி மாறியதில் வேலுச்சாமி வாத்தியார்.என் தந்தையாரின் நண்பர் ஆகையால்,மிக நன்றாக் பழகுவார்.வீட்டிற்கும் வந்து செல்வார்.

ஏழாம் வகுப்பு : ரங்கசாமி வாத்தியார் (ஸொண்டி என்று பட்டப்பெயர்)
நாங்கள்லாம் பெருசாயிடெமில்ல, பட்டப்பேரு வெக்க ஆரம்பிச்சுட்டோம்.

எட்டாம் வகுப்பு : சரசுவதி டீச்சர், ஆறாம் வகுப்பு வேலுச்சாமி வாத்தியாரின்
இல்லத்தரசி. (கூளச்சி என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு).

ஒன்பதாம் வகுப்பு : கந்தசாமி வாத்தியார். செம அடி. பட்டையக் கிளப்பிருவாரு.இவருக்கு ஒரு பழக்கம் உண்டு. எல்லா வார்த்தைகளுடன்
ம் சேர்த்து பேசுவாம்.

“என்னம்,சொல்லும்,பாரும்.”இப்படி பேசுவார் என்று தெரிந்திருந்தும் ஒரு முறை வரலாறு பாடம் நடத்தும்போது “constantinoble”என்பதை “கான்ஸ்டான்டிநோபிளாம்” என்று சொன்னார்.

கேள்வி பதில் நேரத்தில் என் முறை வந்தபோது அவர் சொன்னது போலவே
“கான்ஸ்டாநன்டிநோபிளாம்”என்று பதிலளித்த போது விட்ட அறை இன்னமும் ரொய்ங்க் என்று ஒலித்துக்கொண்டிருக்கிறது.அடுத்த நாளே அவருகிட்ட டியூசன் கிளாஸ் சேந்துட்டமில்ல.

பத்தாம் வகுப்பு : உதவித்தலைமை ஆசிரியர் இலட்சுமண வாத்தியார்.
இவர்கிட்டவும் டியூசன் படிச்சோமுல்ல.

மேலும் பல பாடங்கள் சொல்லிக்கொடுத்த தேவகி டீச்சர்,கிருஷ்னண் வாத்தியார், லாஜிக்கலி ராஜேந்திரன் வாத்தியார்,ஹிந்தி டீச்சர் குமாரி அம்முக்குட்டி,உடற்பயிற்சி ஆசிரியர் பொன்னுச்சாமி,என்.சி.சி பொறுப்பு ஆசிரியர் இராமசாமி, ஓய்வு பெறும் காலத்திலும் களைப்படையாது
பேட்மிண்ட்டன் விளையாடி தமிழாசிரியர் நடேச வாத்தியார்,தலைமை ஆசிரியர் நடராஜன் என்னும் கட்டையன் எல்லோர்ரையும் நினைவு கூர்கிறேன்.

உயர்கல்வி படிக்கும் போது (அதெல்லாம் படிச்சியா பெருசு)தலையில் இரண்டுகொம்பு முளைத்து விட்டதால் அந்த ஆசிரியர்கள் சொன்ன அறிவுரைகள் எதுவும் கேட்டவில்லை.ஆனால் அவர்கள் அனைவரும் ஞாபகத்தில் இருக்கிறார்கள்

ஆசிரியர்களை நினைவுபடுத்திய இந்தப்பதிவை அவர்களுக்கே சமர்ப்பித்து,
இப்பதிவை படிக்கும் நீங்கள் எல்லாரும் ஆசிரியர்களே, ஏனென்றால் தினமும்
உங்களிடமிருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டுதானிருக்கிறேன்.

வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி.

3 பதில்கள் “கான்ஸ்டான்டிநோபிளாம்” க்கு;

  1. தம்பி சொல்வதென்னவென்றால்:

    சூப்பர் :)

  2. பெருசு சொல்வதென்னவென்றால்:

    நன்றிங்க தம்பி

  3. .:: மை ஃபிரண்ட் ::. சொல்வதென்னவென்றால்:

    நீங்களும் ககொசுவர்த்தியை சுத்தியாச்சா?

    அது என்ன? உங்க வகுப்புல மட்டும் எல்லாமே டீச்சர் பொண்ணுங்களா இருக்காங்க?

மறுமொழி இடுக