பேசாம கொஞ்சநாளைக்கு தமிழ்மணத்துக்கு பேர மாத்தி வெக்க சிபாரிசு செய்யலாமுன்னு நெனக்கிறேன்.
என்னமோ கலைச்சேவையும் தமிழ்ச்சேவையும் செய்யுற மாதிரி ஆரம்பிச்சாங்க. இந்த கிறுக்கு புடிச்ச பசங்க போடுற ஆட்டம் தாங்கமுடியலியே.
புதுசா யாராவது வந்து பாத்தாங்கன்னா,அடப்பாவி ஏதோ
கீழ்ப்பாக்கம்,நாகூர் கோஷ்டிககிட்டே மாட்டிடம்டா சாமின்னு இல்ல நெனப்பாங்க.
இந்த கிறுக்க தம்பட்டம் அடிச்சுக்கறதுக்குன்னே கூட்டமா
அலையராங்கப்பா.இந்த ஆட்டத்த ஆரம்பிச்சு வெச்ச கிறுக்கு புடிச்ச புண்ணியவான்(வதி) யாருன்னே தெரியலியே.
இந்தக்கிறுக்குப்பத்தி நம்ம கூகுளாண்டவர் என்ன சொல்றாருன்னு எட்டிப்பாத்தா மக்கா , இங்க நீங்களும்தான் பாருங்களேன். ஒரு கூட்டமாத்தான் கிளம்பியிருக்காங்க.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி இப்படித்தாங்க எப்படி?
எப்படி?ன்னு கிறுக்குனாங்க.
கிறுக்குத்தனத்துக்கும் பைத்தியகாரத்தனத்துக்கும் என்ன மேன் வித்தியாசம். டமாரம் டம்பட்டம் தாரை தப்பட்டை
எல்லாமெல்ல அடிச்சு எனக்கு இது புடுச்சிருக்கு, இப்பிடி செய்வேன், அப்ப அப்படி செஞ்சேன், இப்ப இப்படி செய்வேன்.
தாங்க முடியலடா சாமி!
இதுல ஒரு அக்கா என்னடான்ன கோக்கு மாக்கு ங்கறாங்க. இன்னோரு அக்கா என்னடான்னா நாந்தான் அப்படி,அதனால நான் யாரையும் கூப்டு சொல்லமாட்டென். ஏன்னா இந்தப்பக்கத்துக்கு வர்ரவுங்க எல்லார்ருமே இந்தக் கிறுக்குகதானே, அப்படிங்கறாங்க. இன்னோரு அக்கா எழுத்தாளி ஆகுறதுக்கு தகுதியே கிறுக்குதான் அப்படிங்கறாங்க.
ஒருத்தரு நான் சாப்புடுறதுல கிறுக்குன்றாரு, இன்னோருத்தரு பீரு குடிகறதுல கிறுக்குன்றாரு.இன்னோரு அண்ணன் டென்ஷன் ஆவனா ஆகமாட்டனான்னு கிறுக்கறாரு.இன்னோரு அண்ணன் நான் ஒரு மாதிரிங்கறாரு.ஒரு பெரியண்ணன் அவரைப்பாத்தாலே சில பேரு ஓடுவாங்கன்றாரு.
படிக்க படிக்க எனக்கே கிறுக்கு புடிச்ச மாதிரி ஆவுதுங்க.
ஒரு கால் கிறுக்கோட இன்னோரு கால் கிறுக்கு சேந்தால்
அரைக்கிறுக்கு ஆவாங்களா, கணக்குப்படி அதுதானே சரி,
இங்க முழுக்கிறுக்கு இல்ல புடிச்சிறுக்கு.
எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல சாமின்னு ஆளாளுக்கு சொந்தக்கிறுக்க சோகக்கிறுக்க போட்டுத்தாக்குறங்க.
படிக்கற நம்மளுக்கே இந்த நெலமென்னா அவுங்க கூட இருக்கறவுங்க நெலமைய நெனச்சா கிறுக்கு புடிக்கறமாதிரி இருக்குங்க.
அவுனுக்கு கிறுக்கு புடிச்சிருக்குடா, இவனுக்கு கிறுக்கு புடிச்சிருக்குடான்னு பேசியிருக்கோம்.எனக்கு அவளப்புடிச்சிருக்கு,இத செய்யப்புடிச்சிருக்கு., அதசெய்ய புடிச்சிருக்குன்னு பேசியிருக்கோம்.
என்னிக்காவது கிறுக்கு புடிச்சிருக்குன்னு பேசியிருக்கமா.
இல்ல பேசினாத்தான் நல்லாயிருக்குமா.கூட்டாளிகள்
இல்லாட்டி நண்பர் கூட்டம்தான் விட்டிருக்குமா.
கிறுக்கப்பத்தி பேசறதுக்கு கிறுக்கணுங்க, கால் கிறுக்கா, அரைக்கிறுக்கா, முக்கால் கிறுக்கா, முழுக்கிறுக்கா இதெல்லாம் முக்கியமில்லீங்க.
சரக்”கிருக்கா” , ஆமான்னாலும் இல்லேன்னாலும் அதுதாங்க உண்மை.
இந்த கிறுக்கு கிறுக்கறதுக்கு காரணம், நம்மள யாரும்
tag றதுக்கு முன்னாடி, இப்படி கிறுக்கிட்டா எஸ்கேப்பு ஆயிடலாமில்லே.
krisperu பதிப்பித்தது.
krisperu பதிப்பித்தது.
krisperu பதிப்பித்தது. 









